தோப்பூர் சந்தியில் சாரதி தூங்கியதால் வைத்தியசாலையில்!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் சந்தியில், டிப்பர் வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பமொன்றில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (09) அதிகாலை 04 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சாரதியொருவரே காயங்களுக்குள்ளாகியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். மூதூரிலிருந்து கங்கைப் பகுதிக்கு மணல் ஏற்றச் சென்ற குறித்த டிப்பர் வாகனம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் … Continue reading தோப்பூர் சந்தியில் சாரதி தூங்கியதால் வைத்தியசாலையில்!